பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தப் பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது.
அருமையாகத் தயாராகியிருப்பீர்கள். உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. தேர்வை சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் முழுக் கவனமும் இருக்கட்டும். முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1896398860714410276?t=D307kMTTmcZpRFKVSmxAxQ&s=19