மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மாநில, ஒன்றிய அரசை கண்டித்து கோவையில் மநீம சார்பாக ஆர்ப்பாட்டம்.

6 ஆகஸ்ட், 2023

                `

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, #கோவை மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, கோவை சுந்தராபுரம், சங்கம் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06-08-2023) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளர் திரு. சிட்கோ சிவா வரவேற்க, மாநில துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்களின் தலைமையில், விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு.மயில்சாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், பரப்புரை மாநிலச் செயலாளர் திருமதி. அனுஷா ரவி, தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஶ்ரீ ராதாஷா தேவியார், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், மாவட்ட செயலாளர்கள் திரு. தம்புராஜ், திரு. மனோரம்யன், திருப்பூர் ஜீவா, கோபி சிவக்குமார் , ஊட்டி ஜாகிர் உசேன், கூடலூர் பாபு, தாராபுரம் ராஜா முகமது, உடுமலை குரு, பெருந்துறை முருகன், கரூர் மோகன்ராஜ், கல்யாணசுந்தரம், ஈரோடு பரணி மற்றும் தாஜுதீன், ராஜேந்திரன், காங்கேயம் செல்வராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டனயுரையாற்றினார்கள்.

கோவை மண்டலத்தைச் சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் மத்திய மாவட்ட செயலாளர் திரு. பிரபு நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், கண்ணன், வினோபா, சிட்கோ நாகராஜ், சுரேஷ், முரளி, ஜலில் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1688200376686637056?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0VUg2n992je26WSRxfjm1mjjpJBcFADeQgHnfRgRDuJMmGRqeoiYUssNSU6XGnifhl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cvm2ea7JuPD/?igshid=MmU2YjMzNjRlOQ==


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post